Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லைலா கானி்ன் இகத்புரி பண்ணை வீட்டில் 6 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
பாலிவுட் நடிகை லைலா கான், தாயார் ஷெலீனா, சகோதரிகள் ஹஸ்மினா, ஜாரா, தம்பி இம்ரான் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையி்ல் காணாமல் போனார்கள். இதையடுத்து லைலாவின் தந்தை நாதீர் பட்டேல் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் தனது புகாரி்ல், பாகிஸ்தானைச் சேர்ந்த பர்வேஸ் தக் மற்றும் அவனுடைய கூட்டாளி ஆஷிப் ஷேக் ஆகியோர் தான் லைலாவையும் மற்றவர்களையும் கடத்தியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பர்வேஸ் தக் காஷ்மீர் போலீசாரிடம் சிக்கினார். அவர் பயன்படுத்தி வந்த கார் லைலா கானின் தாயாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிப் ஷேக்கும் கைது செய்யப்பட்டார். பர்வேஸ் தக்கை மும்பை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்ததில் லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தார் சுட்டுக் கொல்லப்பட்டதாக பர்வேஸ் தெரிவித்தார்.
கொலைக்கான காரணம்:
லைலாவின் தாய் ஷெலீனா நாதீர் பட்டேலைப் பிரிந்த பிறகு பர்வேஸுடன் தொடர்பு வைத்து அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
லைலா கான் தனது குடும்பத்தாருடன் நாசிக் அருகே உள்ள இகத்புரியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். பர்வேஸும் அந்த வீட்டில் வந்து தங்கிச் சென்றுள்ளார். இதற்கிடையே ஷெலீனாவுக்கும் பர்வேஸின் கூட்டாளி ஆசிப் ஷேக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பர்வேஸ் ஆத்திரத்தில் ஷெலீனாவை தாக்கினார். இதில் அவர் இறந்து போனார். இதைப் பார்த்த லைலா கான் உள்ளிட்ட 5 பேரை அவர் சுட்டுக் கொன்றார். இதை அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பர்வேஸ் தக்கை அழைத்துக் கொண்டு இகத்புரி பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு 6 எழும்புக்கூடுகள், கத்தி, கட்டை, 2 செல்போன்கள், பை நிறைய பெண்கள் உடைகள், நகைகள் ஆகியவை கிடைத்துள்ளன. அந்த எலும்புக் கூடுகள் லைலா கான் மற்றும் அவருடைய குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.