பிலிம்பேர் விருதில் 7 பிரிவுகளில் மோதும் கத்தி
சென்னை: பிலிம்பேர் விருதுகள் என்றால் எல்லோருக்கும் தெரியும் அல்லவா, வருடாவருடம் இந்தியாவில் வெளிவரும் அனைத்துப் படங்களிலும் இருந்து சிறந்த கலைஞர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்து இந்திய அரசால் வழங்கப் படும் ஒரு கவுரவம்தான் பிலிம்பேர் விருதுகள். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான தமிழ் படங்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ள நிலையில், விஜய் நடித்த கத்தி திரைப்படம் பிலிம்பேரில் 7 விருதுகளுக்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

கடந்த வருடம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியான கத்தி திரைப்படம் சுமார் 70 கோடி செலவில் எடுக்கப்பட்டு 130 வசூலைக் குவித்தது. 2014 ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஒருசில திரைப்படங்களில் கத்தியும் ஒன்று. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் விஜய் மற்றும் சமந்தா நடித்திருந்தனர். விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில், அவரே சொந்தமாக செல்பி புள்ள என்ற பாடலையும் அனிருத் இசையில் பாடியிருந்தார்.
தற்போது இந்த வருடம் நடக்க இருக்கும்62 வது பிலிம்பேர் விருதுகளில் கத்தி திரைப்படம், சுமார் ஏழு பிரிவுகளில் போட்டியிடப் போகிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை,சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பாடகர் ஆகிய 7 பிரிவுகளில் கத்தி திரைப்படம் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.இதில் எந்தப் பிரிவில் விருதை வெல்லப் போகிறது என விஜயின் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கத்திக்கு ஷார்ப் அதிகம்தான்...


Click it and Unblock the Notifications











