Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
80ஸ் நடிகைகள் ஒன்று கூடி அரட்டை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
சென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நடிகையாக வலம் வந்தவர்களை என்றுமே மறக்க முடியாது. என்பதுகள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்தகால கட்டத்தில் தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்கள் வரிசைகட்டி நின்று பல வெற்றிப்படங்களை நமக்கு கொடுத்தனர்.
படங்களை மட்டும் அல்லாது பலநடிகைகளின் வரவும் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது.ராதிகா, ராதா, அமலா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, சீதா, வடிவுக்கரசி,மாதவி, ரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திரையில் மின்னினர்.
இவர்கள் அனைவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டு அன்பை பகிர்ந்து தற்போது வரை நல்ல நண்பர்களாக உள்ளனர். அதுபோன்ற ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் , ராதிகா சரத்குமார், ராதா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, குஷ்பு, லிசி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து அரட்டை அடித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அருள்நிதியின் டைரி படம்... 15ம் தேதி டீசர் ரிலீஸ்.... அப்டேட் செய்த அருள்நிதி
இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் வார இறுதி நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.