Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
80ஸ் நடிகைகள் ஒன்று கூடி அரட்டை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
சென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நடிகையாக வலம் வந்தவர்களை என்றுமே மறக்க முடியாது. என்பதுகள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்தகால கட்டத்தில் தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்கள் வரிசைகட்டி நின்று பல வெற்றிப்படங்களை நமக்கு கொடுத்தனர்.
படங்களை மட்டும் அல்லாது பலநடிகைகளின் வரவும் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது.ராதிகா, ராதா, அமலா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, சீதா, வடிவுக்கரசி,மாதவி, ரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திரையில் மின்னினர்.
இவர்கள் அனைவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டு அன்பை பகிர்ந்து தற்போது வரை நல்ல நண்பர்களாக உள்ளனர். அதுபோன்ற ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் , ராதிகா சரத்குமார், ராதா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, குஷ்பு, லிசி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து அரட்டை அடித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அருள்நிதியின் டைரி படம்... 15ம் தேதி டீசர் ரிலீஸ்.... அப்டேட் செய்த அருள்நிதி
இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் வார இறுதி நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.