அடேங்கப்பா.. மகேஷ் பாபுவுக்கு 9 மில்லியன் ஃபாலோவர்ஸா!
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை டிவிட்டரில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் 9 மில்லியனை கடந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவர் தான் மகேஷ் பாபு, இவரது அப்பா ஒரு நடிகர். அப்பா திரையுலகில் உள்ளார் அதனால் கவலை இல்லை என்று இல்லாமல் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து திரையுலகில் பெரிய உயரம் அடைந்தார்.

இவரது திரைப்படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். இவரால் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ய முடியும் என்று பல படங்களில் நிரூபித்து இருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்குரியது.
இவர் அங்கு நடித்த ஒக்கடடு தான் அந்த சமயத்தில் ஒரு திரைப்படம் அதிக வசூல் சாதனை புரிந்தது அதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. மேலும், தமிழில் விஜய் நடித்து வெளியான போக்கிரி, ஒக்கடடு படத்திற்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

கடந்த ஜனவரி மாதம் சங்கராந்திக்கு இவரது சரிலேறு நிக்கேவரு படம் வெளியானது, இத்திரைப்படம் அந்த மொழி திரைப்படங்களில் ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, சங்கீதா மற்றும் விஜய் சாந்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இத்திரைப்படம் 50 நாளை கொண்டாடியது.
தற்போது சத்தமே இல்லாமல் மகேஷ் பாபு அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். டிவிட்டரில் இவரை பின் தொடரும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 9 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் அதிகம் டிவிட்டர் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமை இவருக்கே உரியது என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து தனது டிவிட்டரில் எனக்கு இவ்வளவு தூரம் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும் இது போன்ற ஒரு பயணத்தில் துணையாக ரசிகர்கள் நீங்கள் உள்ளீர்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை டிவிட்டரில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் 9 மில்லியனை கடந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவர் தான் மகேஷ் பாபு, இவரது அப்பா ஒரு நடிகர். அப்பா திரையுலகில் உள்ளார் அதனால் கவலை இல்லை என்று இல்லாமல் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து திரையுலகில் பெரிய உயரம் அடைந்தார்.
இவரது திரைப்படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். இவரால் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ய முடியும் என்று பல படங்களில் நிரூபித்து இருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்குரியது.
இவர் அங்கு நடித்த ஒக்கடடு தான் அந்த சமயத்தில் ஒரு திரைப்படம் அதிக வசூல் சாதனை புரிந்தது அதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. மேலும், தமிழில் விஜய் நடித்து வெளியான போக்கிரி, ஒக்கடடு படத்திற்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
கடந்த ஜனவரி மாதம் சங்கராந்திக்கு இவரது சரிலேறு நிக்கேவரு படம் வெளியானது, இத்திரைப்படம் அந்த மொழி திரைப்படங்களில் ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, சங்கீதா மற்றும் விஜய் சாந்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இத்திரைப்படம் 50 நாளை கொண்டாடியது.
தற்போது சத்தமே இல்லாமல் மகேஷ் பாபு அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். டிவிட்டரில் இவரை பின் தொடரும் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 9 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் அதிகம் டிவிட்டர் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமை இவருக்கே உரியது என்று சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து தனது டிவிட்டரில் எனக்கு இவ்வளவு தூரம் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும் இது போன்ற ஒரு பயணத்தில் துணையாக ரசிகர்கள் நீங்கள் உள்ளீர்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











