Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீதிமன்ற சம்மனை நயன்தாராவுக்கு அனுப்பி வைத்தது நடிகர் சங்கம்!
கள்ளக் காதலர்களாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதற்கு பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பு தெரிவித்தார். குடும்ப நல நீதிமன்றத்தில் பிரபுதேவா தன்னோடு சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டுமென வழக்கும் தொடர்ந்தார்.
கணவனை தன்னுடன் வாழ விடாமல் தடுக்கிறார் என்று நயன்தாராவையும் மனுவில் சேர்த்தார் ரம்லத். மேலும் பிரபுதேவா பெயரில் உள்ள சொத்துக்களை விற்க தடை விதிக்க வேண்டுமென்றும் இன்னொரு மனுதாக்கல் செய்து இருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு சம்மன் அனுப்பினார். இருவரும் ஆஜராகவில்லை. நயன்தாராவுக்கான சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வாங்க மறுத்து விட்டனர். எனவே சம்மன் திரும்பவும் கோர்ட்டுக்கே வந்தது.
இதையடுத்து இரண்டாவது சம்மனை கோர்ட்டு மூலமும் தனிப்பட்ட முறையிலும் ரம்லத் சார்பில் வற்புறுத்தப்பட்டது. அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
நயன்தாராவுக்கான 2-வது சம்மனும் நடிகர் சங்க மானேஜர் பெயருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நடிகர் சங்க மானேஜர் பெற்றுக் கொண்டார்.
நடிகர் சங்க வக்கீலுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து சம்மனை கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள நயன்தாரா வீட்டு முகவரிக்கு பதிவு தபாலில் நடிகர் சங்கம் அனுப்பி வைத்தது.
பிரபுதேவாவுக்கான சம்மன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி 23-ந்தேதி நேரில் ஆஜராவதா? அல்லது வக்கீலை ஆஜராக செய்வதா? என்று பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வழக்கு முடியும் வரை நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் ரம்லத் வக்கீல் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதையும் மீறி இருவரும் துபாயில் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது!