Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ் சினிமா இயக்குநர்களின் பிள்ளைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 90 இலவச இடங்கள்!
தமிழ் சினிமா இயக்குநர்களின் பிள்ளைகளுக்காக தங்கள் கல்லூரிகளில் 30 இடங்களை இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளனர் ஜெகத்ரட்சகன், ஏசி சண்முகம் மற்றும் ஐசரி கணேசன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், ஏசி சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் படிக்க இயக்குனர் சங்க உறுபினர்களின் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் கல்லூரியில் மூவரும் இணைந்து தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.
கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 சீட்டுகள், ஏசி சண்முகம் 20 சீட்டுகள், ஐசரிகணேசன் 20 சீட்டுகள் என்று மொத்தம் அறுபது சீட்டுகள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.
மற்றும் விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர்,எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார்,பாலா, , சித்ராலட்சுமணன், ராமதாஸ், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைபுலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன், ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.