இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி
சென்னை : எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகாவின் தங்கை என குடும்ப உறுப்பினர்கள் உடன் சினிமாவிற்குள் வந்தவர் தான் நிரோஷா.
நிரோஷா தமிழில் மனிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் முலம் அறிமுகமானார்.
முதல் படமே மனிரத்னத்தின் படம் படமும் ஹிட் இவரது சினிமாவின் வாழ்க்கையும் துவங்கியது.பல நடிகைக்கு முதல் படமே ஹிட் ஆவது இல்லை ஆனால் நிரோஷாவிற்கு முதல் படத்திலே யே ஹிட்.

இதில் வரும் வா வா அன்பே அன்பே என்ற பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நின்று கொண்டு இருக்கிறது.இப்பாடலில் நிரோஷாவின் நடிப்பு அற்புதமாக இருக்கும் என்று பலரும் பாராட்டினார்கள்.
அறிமுகமான வருடமே இவர் நடிப்பில் ஜந்து திரைப்படங்கள் வெளியாகின.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.பின் மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிக்கின்ற காலத்திலே நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார் நிரோஷா. ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக நடித்த இவர் பின்னாளில் துனை நடிகையாக பல படங்களில் நடிக்க துவங்கினார்.
வெள்ளித்திரையில் ஜொலித்தது போல சின்னத்திரையிலும் ஜொலித்தார் நிரோஷா.
சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற ஒற்றை சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தார் நிரோஷா.

தற்போது சின்னத்திரையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் உயிரே என்ற சீரியைல தயாரித்தும் வருகிறார் நிரோஷா.
இது போன்ற ஒரு சீரியலை தயாரித்து திறமை படைத்த பல பேருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் நிரோஷா.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிரோஷாவிற்கு திரைப்பட கலைஞர்கள் பலரும் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











