Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
காதலே காதலே 96 படத்தில் வாகை சூடிய கார்த்திக் நேத்தாவுக்கு கால்கட்டு போட்டாச்சு
சென்னை: காதலே காதலே பாடலை எழுதிய 96 படப் புகழ் கவிஞர் நேத்தாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான 96 படத்தின் பாடல்கள் கேட்க கேட்க இனிமையானவை. அந்த பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரர் கார்த்திக் நேத்தா. இப்படத்திற்காக 2018ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார்.
மேலும் நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ் படங்களின் பாடல்களையும் எழுதியவர் இவர் தான். இவரின் தனித்துவமிக்க பாடல் வரிகளுக்கு பின்னால் ஒரு ஆசான் இருக்கிறார்.
அவர் தான் நமது புகழ் பெற்ற மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார். பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் கார்த்திக் நேத்தா. அதனால் நா.முத்துக்குமாரின் தாக்கம் இவரிடமும் இருப்பது இயல்பு தானே.
96 படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததால் அதன் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நேத்தாவிற்கு நிறைய திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
கடந்த 2011ஆம் ஆண்டில் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுத்தில் சின்மயி பாடிய சர சர சார காத்து வீசும் போது பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு பாடல்.
அந்த பாடலை எழுதியது நான் தான் என்றும் அதில் சில வரிகளை மற்றும் கவிகள் வைரமுத்து மாற்றிவிட்டு அது தனது பாடல் என்கிறார் என்று கார்த்திக் நேத்தா சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.