Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எனக்கு அமைதி தேவை..ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை !
மும்பை : பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில், அதே பரபரப்புக்கு ஈடுகொடுத்து அனைவரும் ஓடிக்கொண்டு இருப்பதால், காரணமே இல்லாத மன அழுத்தத்தில் சிக்கி தங்கள் விலை மதிப்பில்லா உயிரை காவு கொடுத்து விடுகின்றனர்.
அதுவும் அனைவரும் வியந்து பார்த்து மெய்மறந்து பூரித்துப்போகும் சினிமாவில் இருக்கும் பலர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாடல் அழகியான அகன்ஷா மோகன் தனியார் சொகுசு ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதல் நாளே மணிரத்னம் என் மூக்கை உடைத்துவிட்டார்... பார்த்திபனின் சுவாரசிய பேச்சு
அகன்ஷா மோகன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த மாடலும் நடிகையுமான அகன்ஷா மோகன். மும்பை அந்தேரியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டலின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
எனக்கு அமைதி தேவை
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். போலீசார் அறையை சோதனை செய்ததில் ஓட்டல் அறையில் கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை, இப்போது எனக்கு அமைதி தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என எழுதி உள்ளார்.
விபரீத முடிவு
எனினும், போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாடல் அழகி அகன்க்ஷா லோகண்ட்வாலாவின் யமுனா நகர் சொசைட்டியில் வசித்துள்ளார் என்றும், புதன்கிழமை மதியம் 1 மணியளவில் ஹோட்டலில் செக் இன் செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதற்குப் பிறகு, அகன்ஷா இரவு உணவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பல விளம்பர படங்களில்
30 வயதான மாடல் அழகி அகன்ஷா மோகன் சமீபத்தில் வெளியான 'சியா' என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்ததை அடுத்து அவரது உடல் இறுதிச்சடங்குக்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீராத மன அழுத்தத்தால் சிலர் இந்த விபரீத முடிவை எடுத்துவிடுகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் அதற்காக தனியாக செயல்பட்டு வரும் மையங்களில் தயவு செய்து ஆலோசனை மேற்கொள்வது நல்லது.