Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அழகிய காதல் காவியம் - இப்படிக்கு மணி
சென்னை: காதலை பலவிதமாக இயக்குவதில் செல்வராகவன் கைதேர்ந்தவர். அழகாக காட்டுவதற்கு கெளதம் மேனன் என வெள்ளித்திரையில் பல இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் காதல் படங்களை தடம்பதித்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிறு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவந்த இப்படிக்கு மணி என்ற குறும்படமும் காதலை மிக அழகாக காட்டியுள்ளது.
நடிகர், நடனர் என திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் கனா காணும் காலங்கள் ராகவேந்திரா தான் இக்குறும் படத்தினை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் அருண்(மணி) மற்றும் விலாசினி(செல்வி) தான் கதையின் உயிரோட்டங்கள். இந்த உயிரோட்டங்களுக்கு உயிர் கொடுத்தது பாடகர் சாய்சரண். இவர் சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்றவர் ஆவார்.
ஒரு விபத்தில் தன்னுடைய பாதி முகத்தினை தீக்காயங்களால் இழந்து, எல்லோராலும் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை ஒரு மனநலம் பாதித்த மணி என்ற ஒரு இளைஞன் காதலிக்கிறார். அப்பெண்ணுடன், கற்பனையிலே வாழ்ந்து தன் கையிலும், அப்பெண்ணின் பெயரை பச்சை குத்திக்கொள்கிறார்.
சாலையில் நடக்கையில் மணி மயங்கிவிழுவதால், அவருடைய டைரி ரோட்டிலே கிடக்க, அது செல்வியின் கையில் கிடைக்கிறது. அந்நேரம் மணியை குணப்படுத்த வெளிநாடு அனுப்பி வைக்கிறார் அவரது தந்தை. சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு, வெளிநாட்டிலிருந்து குணமாகி திரும்பும் மணி சாலையின் ஓரத்தில், மனநலம் பாத்திக்கப்பட்ட நிலையில் பரிதாபமான கோலத்தில் செல்வியை காண்கிறார். செல்வியை பற்றி மணி அங்கிருந்த சிலரிடம் விசாரிக்கிறார். அவர்கள் இவ்வளவு கேட்கிறீர்களே உங்கள் பெயர் என்ன என்று கேட்கும்போது மணி என்கிறார்.
மணி என்ற பெயரை கேட்டதும் செல்வி அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார். அங்கிருந்து செல்லும் மணி தன் கையில் பச்சை குத்தியுள்ள செல்வி என்ற பெண் தான் தன் கண்முன் இறந்ததை அறியாமல், அப்பெண்ணினை தேட செல்லும் பொழுது படம் முடிகின்றது.
காதலை ஒரு புதிய பரிமாற்ற கோணத்தில் சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ராகவேந்திரா. மணியாக வரும் அருண், மற்றும் முதல் முறையாக நடித்த விலாசினி இருவரின் நடிப்பும், பாராட்டுக்குரியது. மேலும் நம்மை உருகவைப்பதில் பின்னணி இசைக்கும், பாடலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
அனைவரின் பாராட்டை பெற்ற இப்படிக்கு மணி திரைப்படம், வெள்ளித்திரையிலும் வெளிவந்து வெற்றிபெற பாராட்டுக்கள்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!