என்ன அஜித் படமா.. ஆனால் வேண்டாம்.. நடிக்க முடியாது.. நல்ல வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை!
நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பை முன்னணி பாலிவுட் நடிகை ஒருவர் மறுத்து இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பை முன்னணி பாலிவுட் நடிகை ஒருவர் மறுத்து இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் இணைந்து கடந்த மாதம் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டார்கள். பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.
இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இதே படக்குழு இணைந்துள்ளது.

யார் எல்லாம் நடித்தார்கள்
பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், இந்த படத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. முக்கியமாக அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்காக இந்த படத்தில் சில சண்டை காட்சிகள், மாஸ் வசனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் அஜித்திற்கு பிளாஷ்பேக் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

யார் எல்லாம்
இந்த நிலையில் அஜித் மனைவியாக இந்த படத்தில் வித்யா பாலன் நடித்து இருந்தார். இவர் பிளாஷ்பேக்கில் பிரசவத்தின் போது படத்தில் இறந்துவிடுவார். இந்த ரோலுக்கு முதலில் வேறு ஒரு பாலிவுட் நடிகையை படக்குழு பேசி இருக்கிறது.

இல்லை
ஆம் முதலில் வித்யா பாலன் ரோலில் நடிகை ஊர்சவி ரடூலாவை படக்குழு அணுகி இருக்கிறது. அட அஜித் படமா என்று நடிகை ஊர்சவி ரடூலாவை சந்தோசமாக கேட்டு இருக்கிறார். ஆனால் பிங்க் பட ரீமேக் என்றதும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

ஏன் அப்படி
பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் மனைவி ரோலுக்கு பெரிய ஸ்கோப் இருக்காது. இதனால் நேர்கொண்ட பார்வை படமும் அதேபோல் இருக்கும் என்பதால் அவர் வேண்டாம் என்று கூறி விட்டாராம். அதேபோல் படத்தில் நடிக்க நேரமும் இல்லை.

நிறைய படம்
ஏற்கனவே நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பெரிய அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் அவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











