தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன்... புலி.. உருவான பிரமாண்டங்களின் கலைக் கூடம்!
ஸ்டுடியோக்களை விட்டு தமிழ் சினிமா அவுட்டோருக்குப் பறந்துவிட்டாலும், பிரமாண்ட செட்கள் அமைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றால்... அது ஸ்டுடியோவில்தான் சாத்தியம்.
இருப்பதிலேயே இன்றைக்கு மகா நவீனமாய் உள்ள ஸ்டுடியோ என்றால் அது ஆதித்யராம் ஸ்டுடியோதான்.

சென்னை ஈசிஆர் சாலையில் சகல வசதிகளோடும் ஆதித்யராம் உருவாக்கியுள்ள இந்த ஸ்டுடியோவில்தான் தசாவதாரம் உருவானது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் உருவானது. இப்போது விஜய்யின் புலி படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் இங்குதான் நடந்தது.
இருபத்தைந்து ஏக்கரில், இரண்டு பகுதிகளாக இந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார் ஆதித்யராம். ஏக் நிரஞ்சன், குஷி குஷிகா, ஸ்வக்தம், சண்டதே சண்டதே படங்களைத் தயாரித்தவர்.
ஸ்டுடியோவை நிர்வகிப்பதோடு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களும் தயாரித்து வருகிறார் ஆதித்யராம்.
Comments


Click it and Unblock the Notifications