Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல இளம் டிவி நடிகர் சபரிநாத் திடீர் மரணம்.. பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.. ரசிகர்கள் ஷாக்!
திருவனந்தபுரம்: பிரபல இளம் நடிகரான சபரி நாத் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். அவருக்கு வயது 42.
மலையாள தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரி நாத்.
இவர் மின்னுக்கேட்டு, அமலா மற்றும் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆரம்பிச்சாச்சா.. ரெசார்ட்டில் சரக்கும் கையுமாக பிரபல நடிகை.. கண்டப்படி கமெண்ட்டடிக்கும் நெட்டிசன்ஸ்!
மனைவி 2 மகள்கள்
நடிகர் சபரி நாத் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
திடீர் நெஞ்சுவலி
இந்நிலையில் நேற்று மாலை சபரி நாத் வீட்டில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் உடனடியாக திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிர் பிரிந்தது
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே சபரி நாத்தின் உயிர் பிரிந்தது. சபரி நாத்தின் திடீர் மரணம் மலையாள தொலைக்காட்சி நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்ப முடியவில்லை
பல நடிகர்கள் அவரவர் சமூக வலைதள பக்கங்களில் சபரிநாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீயும் ஞானும் நடிகரான ஷிஜு ஏஆர் சபரி நாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.