Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திருக்குறளை வைத்து உருவாகும் படத்தில் மோகன்பாபுவின் மகன்! - இரு மொழிகளில் தயாராகிறது
சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் 'குறள் 388'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் 'ஓட்டர்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத்ராஜ், போசாளி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்ற 388-வது குறளின் கருத்துக்கள் தான் இந்தப் படத்தின் கதைக் கரு. அதாவது மக்களை முறையாகப் பராமரித்து காக்கின்ற மன்னன். அந்த மக்களுக்கு இறைவனைப் போன்றவன் என்பது அந்த குறளின் கருத்து.
'இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையான பரபரப்பான கருத்தை உள்ளடக்கிய படமாக 'குறள் 388' உருவாகிறது. இந்தப் படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும்' என மனோஜ் மஞ்சு கூறியிருக்கிறார்.