Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது
ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படவிருக்கிறது.
தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் உதய்கிரண். பொய் படம் மூலம் கோலிவுட் வந்தவர் வம்பு சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உதய்கிரண் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். உதய் கிரணுக்கு படங்கள் கிடைக்காமல் இருக்க தெலுங்கு திரை உலகின் ஜாம்பவான்கள் சிலர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் குடும்ப பிரச்சனையும் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உதய் கிரணின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உதய் முடிவுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் காரணம் என்று கூறப்பட்டதும் படத்தில் காண்பிக்கப்படுமாம்.