Don't Miss!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- News நெற்றியில் "விபூதி" அழித்தாரா அண்ணாமலை? பழங்குடி பெண் நிற்கும்போதே? வீடியோவுடன் வந்த காயத்ரி ரகுராம்
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Finance மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பேங்க்கில் முதலீடுகளுக்கு அதிக வட்டி தராங்க..நோட் பண்ணுங்க!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'!
கணவன், மனைவி உறவை பற்றி பேசும் படம் 'அதையும் தாண்டி புனிதமானது'.
சென்னை: கணவன், மனைவி உறவை பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது ' என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைகொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன். இவர் 'அப்பா ..வேணாம்ப்பா..' என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.
இந்த படம் கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேகிறது. படம் குறித்து இயக்குனர் ஆர்.வெங்கட்ரமணன் கூறியதாவது, "இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப்போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதை பற்றி சொல்லியுள்ளோம்" என்றார்.
புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும் , வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி ,வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.
இந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.