Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்
விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாம் பேச வேண்டும்; விலங்குகளின் நலம் குறித்த விதிகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை: மாணவர் போராட்டம் தலைவர் இல்லாததால் திசைமாறியது என்பது தவறு; தலைவர் இல்லாத இயக்கம்தான் நேர்மையானது; என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் கமல்ஹாஸன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசவும் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி நடந்திருக்கலாம். வேர் இதுதான். அதற்கான களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.
இத்தனை பேர் இறந்த பிறகும் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசாமல் இருப்பது நமக்கு நாமே அழிவை உருவாக்கிக்கொள்வது ஆகும்.
அதேபோல், மாணவர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராடுவது அவர்கள் உரிமை. அதை சரியென்றும் தவறென்றும் சொல்வதற்கு நான் யார்?
அதேபோல் பீட்டாவை தடை செய்ய வேண்தும் என்று கூறினால், வேறு ஒரு பெயரில் இன்னொரு விலங்குகள் நல அமைப்பு உருவாகும்.
ஒரு அமைப்பு வேண்டாம் என்று சொல்வதை விட, அதை ரெகுலேட் செய்வது குறித்து யோசிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு போராட்டத்துக்கு பிறகு தன்னால் இயன்றதை சரியாக செய்தது என்பது என் கருத்து.
அதேபோல், தலைவன் இல்லாததால் போராட்டம் இறுதியில் திசைமாறியது என்று சொல்வது தவறு. தலைவனை விட, இதையெல்லாம் தொகுத்து சொல்ல ஆட்கள் இருந்தால் போதும். தலைவன் இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.