Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்
விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாம் பேச வேண்டும்; விலங்குகளின் நலம் குறித்த விதிகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை: மாணவர் போராட்டம் தலைவர் இல்லாததால் திசைமாறியது என்பது தவறு; தலைவர் இல்லாத இயக்கம்தான் நேர்மையானது; என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் கமல்ஹாஸன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசவும் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி நடந்திருக்கலாம். வேர் இதுதான். அதற்கான களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.
இத்தனை பேர் இறந்த பிறகும் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசாமல் இருப்பது நமக்கு நாமே அழிவை உருவாக்கிக்கொள்வது ஆகும்.
அதேபோல், மாணவர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராடுவது அவர்கள் உரிமை. அதை சரியென்றும் தவறென்றும் சொல்வதற்கு நான் யார்?
அதேபோல் பீட்டாவை தடை செய்ய வேண்தும் என்று கூறினால், வேறு ஒரு பெயரில் இன்னொரு விலங்குகள் நல அமைப்பு உருவாகும்.
ஒரு அமைப்பு வேண்டாம் என்று சொல்வதை விட, அதை ரெகுலேட் செய்வது குறித்து யோசிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு போராட்டத்துக்கு பிறகு தன்னால் இயன்றதை சரியாக செய்தது என்பது என் கருத்து.
அதேபோல், தலைவன் இல்லாததால் போராட்டம் இறுதியில் திசைமாறியது என்று சொல்வது தவறு. தலைவனை விட, இதையெல்லாம் தொகுத்து சொல்ல ஆட்கள் இருந்தால் போதும். தலைவன் இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.