Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாயம் காண வாராயோ... ஒரு வீடே பாடும் பாட்டு இது!
அருள் மூவிஸ் தயாரித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடவிருக்கும் படம் களம்.
இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை.....' பாடல் நினைவிருக்கிறதா?|
அதே பாணியில், ஒரு பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக் கொண்டு ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது களம் என்ற படத்துக்காக. இந்தப் பாடலை அந்த வீடே பாடுவது போல் காட்சி அமைத்திருக்கிறாராம் படத்தை இயக்கும் ராபர்ட் ராஜ்.
மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும் அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறாராம். ஏப்ரல் 29ஆம் தேதி களம் வெளியாகிறது.
மாயம் காண வாராயோ பாடலின் வரிகள்:
பல்லவி
மாயம் காண வாராயோ - உன் கண்கள் பொம்மையோ?
நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்
என் மேனி ஆனதோ?
அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட
வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட
உள்ளே வருகவே
உன்னைத் தருகவே
சரணம்
ஜன்னல் மூடி மெளனம் கூட்டி
மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்
பிரயாணங்கள் அவை முடியும் முன்னே
பிறவி சாந்தியை பரிசளிப்பேன்
மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே
உனைக் கொண்டாடி ஓய்வேனே
அன்பாய்த் தொடும்
அந்நாள் வரும்
இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் சுபீஷ் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கிறார். ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களையும், பார்வதி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள்.