Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீள முடியாத துக்க இரவு!
- வெங்கட்
இந்த இரவு எங்கள் தமிழ் திரை உலகில் பலருக்கும் நித்திரை வராத இரவு ... நேற்றைய சிந்தனைகளில் முழுகும் இரவு .... சித்தாந்த வேதாந்த கர்ம தர்ம சிந்தனைகள் முட்டி மோதிக் கொள்ளும் இரவு...
இளையராஜா, ஞானி என்ற நிலை எல்லாம் இன்றி மறுக்க முடியாமல் மறக்க முடியாமல் கலங்கி இருக்கும் இரவு
கதாசிரியர் செல்வராஜ் 'அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் கீதம்...' என தன்னை தானே ஆற்றிக்கொள்ள முயற்சிக்கும் இரவு..
கங்கை அமரன் கலங்கி கலங்கி கதறி அழுதாலும் ஆறாத துக்கத்தை அசை போட்டு அசை போட்டு ஜீரணிக்க போராடும் இரவு...
பாரதிராஜா நிறம் மாறாத பூவாக நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த பஞ்சு அண்ணனின் நினைவோடு புலம்பி புலம்பி பிதற்றித் தள்ளும் இரவு..
கண்ணதாசன் குடும்பத்தார் மீண்டும் ஒரு முறை கவிஞரை இழந்த சோகம் தாக்கியது போல துவண்டு போகும் முடியாத விடியாத இரவு
பாலச்சந்தர் இல்லாமல் பாதி பலம் இழந்த ரஜினிகாந்துக்கோ அஸ்திவாரத்தில் விழுந்த இரண்டாவது அடியாக வலிக்கின்ற இரவு..
கமலஹாசனுக்கு இன்றுதான் உண்மையில் உடனடியாக ஓடி வராத அளவுக்கு மனதில் அடிபட்ட மாயங்கள் காயங்கள் நிறைந்த இரவு..
இப்படி சென்னை நகரத்திலும் நகரத்தார் சமூகத்திலும் பலரையும் பாதித்த பஞ்சு அருணாச்சலம் அவர்களே நீங்கள் எங்கும் செல்ல முடியாது
எங்களுடன் இருங்கள் ... நாங்கள் எப்போதும் உங்களுடந்தான்!