பேத்தியை மடியில் வைத்துக் கொஞ்சிய ராதிகா.. சூப்பர் மெசேஜ்!
சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ராதிகா, சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், தனது கணவர் சரத்குமார் தலைவராக இருக்கிற சமத்துவ மக்கள் கட்சியில் மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார்.
தனது கணவருடன் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அண்மையில் கூறி இருந்தார். இதனால், தொடர்களில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

இன்றளவும் நல்ல பெயர்
கிழக்கே போகும் ரயிலே திரைப்படத்தில் மாநிறத்தில் சுறுசுறுப்பாக நடித்து அனைவரது மனதையும் களைத்து நெஞ்சில் இடம் பிடித்தார் ராதிகா. தொடர்ந்த சினிமா, சீரியல், அரசியல் என ஒரு ரவுண்டடித்து வருகிறார். துணிச்சல் மிகுந்த நடிகை, கருத்து கூர தயங்க மாட்டார் என சினிமா வட்டாரத்தில் இன்றளவும் இவருக்கு ஒரு நல்லப்பெயர் இருக்கிறது.

விலகினார்
சித்திய சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அந்த தொடர்களில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். என்னத்தான் இவர் அப்படி கூறினாலும், இல்லத்தரசிகள் மற்றும் ராதிகாவின் ரசிகல்கள் அவரைமீண்டும் சின்னத்திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.

வைரல் புகைப்படம்
இந்நிலையில், ராதிகாவின் மகள் ரேயானின மகள் ராத்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தனது செல்லப் பேத்தியை மடியில் வைத்து கொஞ்சிய படியும், அழகாக கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.

குறிக்கோளை ஒருபோதும் கைவிடாதீர்
மேலும், இந்த அழகான புகைப்படத்துடன் ஆழமான கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொருவரும் குறிக்கோள் மற்றும் நோக்கத்துடனே எழுகிறார்கள், குறிக்கோளை ஒரு போதும் கைவிடாதீர், அதற்கான வேலைகளை செய்ய தயாராக இருங்கள் என இளைஞர்களுக்கு ஊக்கத் தருவது போல பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











