Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விஜய்யின் உண்மையான குணத்தை சர்காரில் பார்பீங்க... முருகதாஸ் சொன்ன சீக்ரெட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: நடிகர் விஜய்யின் உண்மையான குணம் தான் சர்கார் படத்தில் அவர் செய்திருக்கும் கதாபாத்திரிம் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் குறித்து வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
சர்கார் படத்தில் உண்மையான விஜய்யை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கு பிரச்சினை நடந்தாலும் அவர் ஓடோடிச் சென்றுவிடுவார். அங்கு பாதுகாப்பு இருக்கா இல்லையா என்றெல்லாம் அவர் யோகிக்க மாட்டார்.
அதுபோல தான் தூத்துக்குடிக்கு அவர் சென்றதும். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. இதையடுத்து நாங்கள் அனைவரும் சென்னைக்கு கிளம்பிவிட்டோம்.
ஆனால் அவர் தானாகவே காரை ஓட்டிச் சென்று தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் பார்த்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். இந்த குணத்தை தான் சர்காரில் நீங்கள் பார்ப்பீர்கள்", இவ்வாறு இயக்கனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.