Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்யின் உண்மையான குணத்தை சர்காரில் பார்பீங்க... முருகதாஸ் சொன்ன சீக்ரெட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: நடிகர் விஜய்யின் உண்மையான குணம் தான் சர்கார் படத்தில் அவர் செய்திருக்கும் கதாபாத்திரிம் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் குறித்து வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
சர்கார் படத்தில் உண்மையான விஜய்யை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கு பிரச்சினை நடந்தாலும் அவர் ஓடோடிச் சென்றுவிடுவார். அங்கு பாதுகாப்பு இருக்கா இல்லையா என்றெல்லாம் அவர் யோகிக்க மாட்டார்.
அதுபோல தான் தூத்துக்குடிக்கு அவர் சென்றதும். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. இதையடுத்து நாங்கள் அனைவரும் சென்னைக்கு கிளம்பிவிட்டோம்.
ஆனால் அவர் தானாகவே காரை ஓட்டிச் சென்று தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் பார்த்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். இந்த குணத்தை தான் சர்காரில் நீங்கள் பார்ப்பீர்கள்", இவ்வாறு இயக்கனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.