Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுந்தர்.சி படத்துக்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: சுந்தர்.சியின் பிரமாண்ட படத்துக்கு இசையமைப்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க மகேஷ் பாபு, சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மையாகிவிட்டது.
இப்படத்துக்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ''சுந்தர்.சி இயக்கவுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறேன்.
மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை வைத்து 30 படங்கள் வரை இயக்கியிருந்தாலும், சுந்தர்.சியின் எந்தவொரு படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.