சுந்தர்.சி படத்துக்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: சுந்தர்.சியின் பிரமாண்ட படத்துக்கு இசையமைப்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க மகேஷ் பாபு, சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மையாகிவிட்டது.
இப்படத்துக்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ''சுந்தர்.சி இயக்கவுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறேன்.
மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை வைத்து 30 படங்கள் வரை இயக்கியிருந்தாலும், சுந்தர்.சியின் எந்தவொரு படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











