Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் கேரளாவுக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்
நியூயார்க்: ஏ.ஆர்.ரஹ்மான் கேரள வெள்ள பாதிப்புக்கு மிகப் பெரிய தொகையை வழங்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒவ்வொரு வெற்றியிலும் சொல்வது எல்லா புகழும் இறைவனுக்கே. அப்படிப்பட்ட இறை பக்தி மிகுந்த ரஹ்மான் கடவுளின் நாடு என அழைக்கப்படும் கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை "கேரளா... கேரளா...டோண்ட் வொர்ரி கேரளா... என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
From my artistes and me touring the USA... To our brothers and sisters of Kerala!
— A.R.Rahman (@arrahman) September 2, 2018
May this small offering help in providing you some relief! pic.twitter.com/9tyxtns3gr
இப்போது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 1 கோடி கேரளாவுக்கு வழங்கியுள்ளார். அமெரிக்காவில் தன்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கலைஞர்களும், நானும் சேர்ந்து இந்த சிறிய உதவியைச் செய்கிறோம். இது துயரத்தில் வாடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது சர்கார் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். செப்டம்பர் 5ம் தேதி அவர் இசையமைத்துள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.