இயக்குநராகிறார் ஏ ஆர் ரஹ்மான்!

நீண்ட நாட்களாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. படத்தை இயக்குவது குறித்து தனது நண்பரான ரசூல் பூக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, "ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போதே ஒரு படத்திற்காக கதையை எழுதி முடித்துள்ளார். இந்த கதையை நானும் ஏ.ஆர்.ரகுமானும் பலமுறை கலந்து பேசியுள்ளோம். விரைவில் படத்தை துவங்கவும் உள்ளோம். இப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர், நடிகையர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது," என்றார்.
உலக சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ரஹ்மான். தான் இசையமைக்கும் படத்தின் கதையில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் அவர்களின் கதைகளில் தேவையான மாறுதல்களையும் அவர் சொல்வதுண்டு.


Click it and Unblock the Notifications











