நான் இசையமைப்பாளரானதிற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்- எஸ்.ஜே.சூர்யா
நான் இசையமைப்பாளரானதற்குக் காரணமே ஏ ஆர் ரஹ்மான்தான் என்றார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா.
எஸ்.ஜே. சூர்யா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து, படத்தை இயக்கி நடித்துள்ள ‘இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் விஜய், தனுஷ், முருகதாஸ், சத்யராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

எஸ் ஜே சூர்யா
இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, "வாலி', 'குஷி' ஆகிய படங்களில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். 'இசை'யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேடவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன்.

சாவித்ரி
பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. இவர் நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார். சமகால சாவித்ரி போல தோன்றினார். நிச்சயம் அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.

ரூ 100 கோடி விஜய்
இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்துள்ள விஜய் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், பழக்கமில்லை என்றாலும் விழாவுக்கு கூப்பிட்டதும் தயக்கமில்லாமல் எப்போ என்றார் தனுஷ். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

சத்யராஜ்
சத்யராஜ் இல்லை என்றால் இந்தப்படம் முழுப்படமாக வந்திருக்காது. ரஜினி, சத்யராஜ், ஷாருக்கான் ஆகியோரிடம் உள்ளுக்குள் இருக்கும் தனித்துவம் வரும். இதிலும் வந்துள்ளது.

ரஹ்மான் தந்த ஊக்கம்
'இசை' படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் 'ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?' என்று ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் இசையமைப்பளராக அவர்தான் காரணம்," என்றார்.


Click it and Unblock the Notifications











