Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முத்துப்பேட்டை தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஷேக்தாவூத் அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஷேக்தாவூத் ஆண்டவரின் 40 அடி சமாதி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இன்று காலை தர்காவுக்கு வந்தார். அவரை தர்கா திருஷ்டி ச.பாக்கர் அலி சஹாஹிப் வரவேற்றார்.
பின்னர் அம்மா தர்காவுக்கு ரஹ்மான் சென்றார். அங்குள்ள ஆற்றாங்கரை பாவா தர்காவுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.
இந் நிலையில் அதற்குள் ரஹ்மான் வந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் தர்காவை சூழ்ந்து கொண்டனர். இதனால் குத்யா பள்ளிக்கு செல்ல திட்டமிட்டிருந்த ரஹ்மான், தனது பயணத்தை முடித்து கொண்டு திரும்பிவிட்டார்.
ரஹ்மானின் வருகை குறித்து தர்கா நிர்வாகிகள் கூறியதாவது, ரஹ்மான் தனது முதல் படமான ரோஜாவிற்கு இசையமைப்பதற்கு முன்பு இங்கு வந்து சென்றார். அதன்பிறகு எந்த படத்திற்கு அவர் இசை அமைத்ததாலும், இங்கு வந்து செல்வது வழக்கம் என்றனர்.