Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யார் நீங்கள்?..இன்னும் வெளியே வராத படத்திற்கு விமர்சனமா..கலாய்த்து சுஹாசினி ட்வீட்!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை ட்விட்டரில் விமர்சனம் எழுதியவரை சுஹாசினி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் படம் இன்று காலை வெளியான நிலையில், ரசிகர்கள் திரைப்படத்தை திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியன் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது.
National Awards 2022: முதல் தேசிய விருதை பெற்ற சூர்யா... ஆனந்த கண்ணீர் வடித்த ஜோதிகா...
அட்டகாசமான இசை
மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பண்டய கால கருவிகளான எக்காளம், நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, கிடுகிட்டி, சுந்தரவளைவு, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்பு ஆகிய வாத்தியங்களை பயன்படுத்திஉள்ளனர். பொன்னி நதி, சோழா சோழா என அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அற்புதமான சினிமா
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முதல் விமர்சனமாக நேற்றே ட்விட்டரில் ஒருவர் ட்விட் போட்டிருந்தார். அதில், பொன்னியின் செல்வன் 1 அற்புதமான சினிமா சாகா டிசைனிங் விஎஃப்எக்ஸ் சீயான், கார்த்தி அழகாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மீண்டும் வந்துள்ளார். ஒட்டுமொத்தமாக பிரமிக்க வைக்கிறது, சில திருப்பங்கள் மற்றும் கைதட்டல் தகுந்த தருணங்களுடன் ஒரு கண்ணியமான வரலாற்று சரித்திரம் என பதிவிட்டிருந்தார்.
யார் நீங்கள்?
அவரின் இந்த ட்விட்க்கு கீழ் சுஹாசினி மணிரத்னம், யார் நீங்கள்? இன்னும் வெளியே வராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுஹாசினி மணிரத்னம் பகிர்ந்த இந்த ட்வீட் இணையத்தில் தற்போது பேசுபொருளாக உள்ளது.
சர்ச்சையில் சிக்கினார்
முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விழாவில் பேசிய சுஹாசினி. இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாட்கள் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில்தான் நடந்துள்ளது. ஆகையால் இது தெலுங்கு மக்களின் படம். நீங்கள்தான் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.