அண்ணானு சொல்லாத ப்ளீஸ்.. சாய் பல்லவியிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்.. அமரன் படம் பாத்தா புரியும்!
சென்னை: தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீசான திரைப்படம் அமரன்.படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படம் முதல் நாளில் 42.3 கோடி ரூபாயை உலகம் முழுக்க வசூலித்து இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும்,சாய் பல்லவியின் காதல் ரொம்ப நன்றாக இருக்கும் அதுகுறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அமரன்'. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

சிவகார்த்திகேயனின் அமரன்: அமரன் படம் பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி,, கமல் ஹாசன், ரஜினி, முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. அதே போல,சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடித்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டனர்.
உண்மைக்கதை: குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் மனதைவிட்டு அகலாமல், அழ வைத்துவிட்டது. ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ள சிவகார்த்திகேயன் கேரியரில் அமரன் திரைப்படம் பெரிய மைல் கல் என்றே சொல்லலாம். இதன்பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி விடும் என்பது நிச்சயம். ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்பதால் ரசிகர்கள் அதனுடன் ஒன்றி விடுகிறார்கள்.
செம சீன்: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமரன் படத்தை ஒரு ராணுவ வீரரின் படமாக மட்டுமில்லாமல் கணவன், மனைவி இடையேயான நெருக்கத்தை சொல்லும் திரைப்படமாக உள்ளது. இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸூக்கும் இடையே காதல் மலர்ந்ததை அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர். கிறிஸ்டியன் கல்லூரியில்தான் முதன்முதலாக முகுந்தை சந்தித்தார் இந்து. அவர்கள் முதன்முதலில் சந்தித்த போது, இந்து, முகுந்தை சேட்டா என்றுதான் அழைத்துள்ளார். சேட்டா என்றால் மலையாளத்தில் அண்ணன் என்று அர்த்தம். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த போதுதான் முகுந்த், சேட்டா என்று அழைக்காதே என்று இந்துவிடம் கேட்டுள்ளார். இந்த காட்சியில் சிவகார்த்திகேயன் அண்ணானு சொல்லாதே என்று சாய் பல்லவியிடம் கெஞ்சும் காட்சி உண்மையில் ரொமான்டிக்காக இருந்தது. அந்த பீல் அமரன் படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.


Click it and Unblock the Notifications











