கோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா!

சென்னை : கோ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கடந்த 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து வெளிவந்த படம் கோ. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்திருந்த இப்படத்தில் நாயகியாக, நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடித்திருந்தார்.

A sequel to KO is here ...

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், தற்போது அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

ஜிகிர்தண்டா படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X