Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா!
சென்னை : கோ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார்.
கடந்த 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து வெளிவந்த படம் கோ. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்திருந்த இப்படத்தில் நாயகியாக, நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடித்திருந்தார்.
எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நாயகனாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.
ஜிகிர்தண்டா படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.