Just In
- 24 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 1 hr ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- News
முழு பாஜகவாக மாறிய திமுக... இந்த கொடுமை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கே - சீமான்
- Sports
என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!
- Finance
Budget 2021.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்!
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Lifestyle
உங்க துணையோட உடம்புல நீங்க எந்தெந்த இடத்துல குடுக்குற முத்தத்துக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா?
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்காக... உருவாகிறது ஸ்பெஷல் பீரியட் செட்!
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்காக ஸ்பெஷல் பீரியட் செட் அமைக்கப்படுகிறது.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்தப் படத்தை இயக்குகிறார்.
இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர். படத்தைச் சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை தயாரிக்கிறார்.

மேகா ஆகாஷ்
சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனியும் நடிக்கின்றனர். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, கும்பகோணம், சென்னை உட்பட பல பகுதிகளில் நடந்தது.

பழமையான சர்ச்
காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையை கொண்ட இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை பேசுவதாக படத்தின் இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பகோணத்தில் நடந்தது. அங்குள்ள பழமையான சர்ச்சில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டன.

மகிழ் திருமேனி
இதையடுத்து இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. அங்கு பல்வேறு பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. விஜய் சேதுபதி, மகிழ் திருமேனி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. விஜய் சேதுபதிக்கான காட்சிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மற்ற நடிகர், நடிகைகளுக்கான காட்சிகளும் முடிவடைந்துவிட்டன.

பிளாஷ்பேக்
பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிக்காக, சென்னையில் சிறப்பு செட் அமைக்கப்படுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் நடப்பது போன்ற காட்சிக்காக இந்த செட் அமைக்கப்படுகிறது. 'இது படத்துக்கு முக்கியமான காட்சி. இதன் ஷூட்டிங் முடிந்ததும் படம் முடிந்துவிடும்' என்று படக்குழு தெரிவித்துள்ளது.