அபார திறமைசாலி போல.. இத்தனூண்டு கொட்டாங்குச்சியில எவ்ளோ மேட்டரு.. அசத்தும் வீதி கலைஞர்!
Recommended Video
சென்னை: கொட்டாங்குச்சி வயலின் மூலம் பல பாடல்களையும் அச்சு பிசகாமல் வாசிக்கும் வீதி கலைஞரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கொட்டாங்குச்சி வயலின் மூலம் பாடல்களை தத்துரூபமாக வாசித்து பிழைப்பு நடத்தி வரும் கலை ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களை அசரடித்து வருகிறது.
தனது கொட்டாங்குச்சி வயலின் மூலம் மூக்குத்தி பூ மேலே, சுத்தி சுத்தி வந்தீக.. மன்மத ராசா.. உள்ளிட்ட பாடல்களை அச்சு பிசகாமல் வாசிக்கிறார் அந்த கலைஞர். அதோடு இந்தி பாடல்களையும் செம அசத்தலாக வாசித்திருக்கிறார் அந்த நபர்.
மெச்சும் நெட்டிசன்ஸ்
அவரது இந்த வீடியோவை யாரோ ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த கலைஞரின் விபரங்கள் ஏதும் தெரியாத நிலையில் அவரின் திறமையை மெச்சி வருகின்றனர் நெட்டிசன்கள்.
அருமையான கலைஞர்
அருமையான இசை கலைஞர் என்கிறார் இந்த நெட்டிசன்.
தெருவிலிருந்து வருகிறது
அபார திறமை கொண்டவராக இருப்பார் போல,திறமைகள் எல்லாம் தெருவிலிருந்து வருகிறது.. தருகிறது.. என்கிறார் இவர்.
மேடையில்லா இசை மேதை
அற்புதமான கலைஞன்.. மேடையில்லா இசை மேதை.. என்கிறார் இவர்.
அழகோ அழகு..
அழகோ அழகு..! என்று அவரது இசை திறமையை பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்.
சிறப்பு
சிறப்பு.. என கைகளை தட்டி பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











