மீண்டும் இணையும் இயக்குனர் அறிவழகன் - நடிகர் ஆதி
நடிகர் ஆதி நடிப்பில் 2009ல் வெளியான ஈரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அறிவழகன். பின்னர் இவர் இயக்கிய ஆறாது சினம், குற்றம் 23 படங்கள் வரவேற்பை பெற்றன. தற்போது இவர் அருண் விஜயை வைத்து பார்டர் படத்தை இயக்கி வருகிறார்.
திரில்லர் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர் அறிவழகன், பட தயாரிப்பில் இறங்கவுள்ளார். தான் தயாரித்து இயக்க இருக்கும் படதத்தில் தனது முதல் பட ஹீரோவான அதியுடன் இணையவுள்ளார். Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா தயாரிப்பில் ஹாரர் திரில்லராக உருவாக்க இருக்கும், இப்படத்திற்கு "சப்தம்" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

சப்தம் படத்தின் பூஜை டிசம்பர் 14ம் தேதி நடைப்பெற்றது. இப்படத்தில் படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











