அடப்பாவிகளா... பாகுபலிய இப்படி கேவலமாவா கலாய்ப்பீங்க?
பிரமாண்ட வெற்றிப் பெற்ற பாகுபலி படத்தின் க்ளைமாக்ஸ் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?' என்ற கேள்வியோடு முடியும்.
இந்தக் கேள்வியை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்கள் என பலரும் கேட்டு, அதுவே இணையத்தில் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
இப்போது யாராவது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் காதிலிருந்து ரத்தம் வராத குறைதான்.
இப்போது இதே கேள்வியை மையப்படுத்தி ஒரு வீடியோ தயாரித்துள்ளது புட் சட்னி என்ற குழு.
இந்த வீடியோ பாகுபலி காட்சிகளை ஏகத்துக்கும் நக்கலடித்துள்ளது. உண்மையில் நக்கல் என்பது நல்ல வார்த்தை. இந்த புட் சட்னி குழுவோ Spoof என்ற பெயரில் சகிக்க முடியாத ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. நெகட்டிவ் பப்ளிசிட்டி என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications