முதலிரவுக்கு முடியாமல் தவிக்கும் சிம்பு!- விவகார கதையாக உருவாகிறதா ஏஏஏ?
த்ரிஷா இல்லனா நயன் தாரா என்ற அதிஅற்புதமான நாட்டுக்கு ரொம்ப அவசியமான படம் இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனும் பீப் பாடல் புகழ் சிம்புவும் இணைந்திருக்கிறார்கள். அன்பானவன் அடங்காதவன் அசராதவன் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் மூன்று சிம்புகள் என்பதெல்லாம் பழைய செய்தி. படத்தின் கதை த்ரிஷா இல்லனா நயன் தாராவை விட விவகாரமான கதையாம்.

அன்பான அப்பா சிம்பு தன் இள வயதில், சந்தோஷமாக இருக்கும் நாய்களை கல்லால் அடித்து பிரித்த பாவத்தால் மகன் அசராத சிம்புவுக்கு முதலிரவு நடப்பதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுகின்றன. இன்னொரு மகன் சிம்பு யாருக்கும் அடங்காதவன். கடைசியில்தான் அசராதவன் முதலிரவு தள்ளிப்போக அடங்காத சிம்பு தான் காரணம் எனத் தெரிய வருகிறது. அது ஏன் என்பதுதான் க்ளைமாக்ஸ் என்கிறார்கள்.
இப்படியெல்லாம் யோசிக்க கண்டிப்பா ஆதிக்கால மட்டும்தான் முடியும். இதுல நடிக்கவும் சிம்புவால மட்டும்தான் முடியும்.
வாழ்க இளைய சமுதாயம்!


Click it and Unblock the Notifications











