Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சேரன் மகள் மனமாற்றத்திற்கு காரணம் ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படமா?
சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் சேரனின் இளைய மகள் காதலித்த விவகாரம் கடந்த சில வாரங்களில் ஊடகங்களில் வெளியானது.
இது தொடர்பாக தாமினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்வதற்கு சேரன் முயற்சிப்பதாக கூறியிருந்தார். சேரன் மீதான இந்த பரபரப்பான குற்றச்சாட்டை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த புகாரை கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்துரு மீதே தாமினி புகார் கொடுத்திருந்தார். அதில் சந்துருவின் நடவடிக்கை பற்றியும் அவர் தனக்கு தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது.
இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தாமினி சேரனுடன் சென்றதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
தலைமை ஆசிரியர் வீட்டில் 15 நாட்கள் தாமினி இருந்தபோது, அவருக்கு பல விதங்களில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. 'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படமும் போட்டு காண்பிக்கப்பட்டும் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மனம் திருந்திய தாமினி, பின்னர் பெற்றொருடன் செல்ல ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.