Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கணக்கு போட்டது சரிதான்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் சில போட்டியாளர்கள் எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என வெறிபிடித்து விளையாடி வருகின்றனர்.
3 வீடுகள் இணைப்பு.. கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறினார் கங்கனா.. மும்பை நீதிமன்றம்!
பல போட்டியாளர்கள் இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே என தற்போது வருத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
5 பேர் நாமினேஷன்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றனர்.
இந்த வார நாமினேஷன்
கடந்த வாரமே ஆஜித் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிதா ஆரியிடம் தேவையில்லாமல் கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனிலும் ஆஜித் இடம் பிடித்ததால் இந்த வாரம் அவர்தான் வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.
ரம்யாவை அனுப்பனும்
அதே நேரத்தில் சக போட்டியாளரான ரம்யா ஆரி குறித்து அவதூறாக பேசி வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் ரம்யாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர்.
காரணம் நீயில்லை
ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யாவின் தம்பி பரசுவும் இந்த வாரம் நீ வெளியே வந்தால் அதற்கு காரணம் நீயில்லை என்று கூறினார். இதனால் இந்த வாரம் தான் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலையில் இருந்து வந்தார் ரம்யா.
இன்றையய எபிசோடில்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஆஜித் வெளியேறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய எபிசோடில் காட்டப்படும் என தெரிகிறது.
ரெட்கார்டு கொடுக்க வேண்டும்
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து எல்லை மீறி நடந்து வருகிறார். ஆரியை அவன் இவன் என்று பேசியதோடு மைக்கையும் கழட்டி அடித்த பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்