Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘லஜ்ஜோ’... தூசி தட்டும் மணிரத்னம்... அமீர்கான் இணைவரா?
ஆனால், அந்த இந்தி பட ப்ராஜெக்ட் 6 வருடங்களுக்கு முந்தையதுதானாம். 2007ல் அமீர்கானை வைத்து 'லஜ்ஜோ' என்ற படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார்.
சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையாக அது அமைக்கப்பட்டிருந்தது. உருது எழுத்தாளர் இஸ்மத் சுஹ்தயின் கதையை அடிப்படையாக வைத்து, பாலிவுட் எழுத்தாளர் அனுராக் கஷ்யப்வுடன் இணைந்து அந்த கதையை சினிமாவுக்கு ஏற்ப மாற்றம் செய்தார் மணிரத்னம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அதில் ஏற்படும் காதல் என போகுமாம் கதை.
பீரியட் பிலிம் என்பதால், ஹிந்தியுடன், உருது மொழியிலும் திறமையுள்ள எழுத்தாளர் கிடைக்காததால், ஸ்கிரிப்ட் மணிரத்னம் நினைத்த அளவுக்கு உருவாகவில்லை.
ராஜஸ்தானில் ஒரே வீச்சில் படத்தை எடுத்து முடிக்க மணிரத்னம் விரும்பினார். ஆனால், முழுமையான ஸ்கிரிப்டை பார்க்காமல், பல்க்காக டேட் கொடுக்க அமீர்கான் தயாராக இருக்கவில்லை. இழுபறியில் படம் இழுத்துக் கொண்டே போனதால், அமீர்கான் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். இதையடுத்து அந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது.
கடல் படத்துக்குப் பின், மீண்டும் பழைய ப்ராஜெக்ட்டையே கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம். பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இந்த படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதி வருகிறாராம். ஆனால் அமீர்கான், கரீனா கபூர் ஜோடி இதில் இணைவார்களா? என்பதுதான் பாலிவுட் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.