Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மனநலத்தை காக்கும் அகத்சு பவுண்டேஷன்... அமீர்கான் மகளின் புதிய முயற்சி!
மும்பை : கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.
அப்டிதான் ஆடுவேன்.. நீ ஏன் பாக்க.. பிளாக் பண்ணிட்டு போ.. கமெண்ட்டடித்தவர்களை கழுவி ஊற்றிய நடிகை!
இந்நிலையில் மக்களின் மனநிலையை பராமரிக்கும்வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான் அகத்சு பவுண்டேஷனை துவக்கியுள்ளார்.
மன உளைச்சல்
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பால் மக்கள் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு அவர்களிடம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஒருவரையொருவர் நேரடியாக எதிர்கொள்ளவும் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் நம்பிக்கையின்மை
அக்கம் பக்கத்து வீட்டினரையும் அந்நியமாக பார்க்கும் மனநிலை உருவாகியுள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதை காட்டிலும் இந்த மனநிலையுடன் யாரையும் நம்ப முடியாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள மிகுந்த சிரமத்தை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அகத்சு பவுண்டேஷன்
இந்த சூழ்நிலையை எளிதாக்க அமீர்கானின் மகள் ஐரா கான் தற்போது அகத்சு பவுண்டேஷனை துவக்கியுள்ளார். இதன்மூலம் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
முதல் முயற்சி
அகத்சு என்றால் தன்னையே ஜெயிப்பது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு இந்த பவுண்டேஷன் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தன்னுடைய முதல் முயற்சி என்றும் மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதல் நோக்கம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.