Don't Miss!
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- News மரம் நடுதல் விழிப்புணர்வு.. 'மா', 'புங்கம்' கன்றுகளை நட்ட பள்ளி மாணவர்கள்! நத்தத்தில் நெகிழ்ச்சி
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?: வைரலாகும் ஐஸ்வர்யா ராய் மகள் வீடியோ
மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை போன்றே அவரின் மகள் ஆராத்யாவுக்கும் டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஆராத்யா நடனப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார்.
ஜோயா அக்தரின் கல்லி பாய் படத்தில் வந்த மேரே கல்லி மேன் என்கிற பாடலுக்கு ஆராத்யா நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
View this post on Instagram#aradhyabachchan cool entry today for @shiamakofficial #summerfunk25years @viralbhayani
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
புலிக்கு பிறந்தது பூனையாகுமா, அம்மாவை போன்றே மகளும் அருமையாக டான்ஸ் ஆடுகிறார் என்கிறார்கள் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள். ஆராத்யா டான்ஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பி.எம்.டபுள்யூ. கார் நம்பர் பிளேட்டில் ரஹ்மான் பெயர்: ரசிகரை திக்குமுக்காட வைத்த இசைப்புயல்
ஆராத்யா டான்ஸ் ஆடியதை பார்க்க ஐஸ்வர்யா, அபிஷேக்குடன் பாட்டி ஜெயா பச்சன், அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோரும் நடனப் பள்ளிக்கு வந்திருந்தனர். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோர் பாலிவுட்டில் இருப்பதால் ஆராத்யாவும் நடிகையாவாரா என்று தெரியவில்லை.
ஆராத்யா எங்கு சென்றாலும் ஐஸ்வர்யா அவரின் கையை இறுக்கப் பிடித்துக் கொள்வது போன்று அவரின் விருப்பதிலும் தலையிடாமல் இருந்தால் நல்லது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.