Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பொறாமை படுறேன்னு சொல்லிட்டாங்க.. நிஷாவிடம் கண்ணீர் விட்ட ஆரி.. கலங்க வைக்கும் அன்சீன் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நிஷாவிடம் தனக்கு பொறாமை இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் கூறியதை கேட்டு கண்ணீர் விட்டு கலங்க வைத்துள்ளார் ஆரி.
பிக்பாஸ் ஃபினாலே வாரத்தை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் விருந்தாளிகளாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.
அர்ச்சனா, ரேகா, ஜித்தன் ரமேஷ், நிஷா என நான்கு போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் சக ஹவுஸ்மேட்ஸ்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதும் இன்று வெளியான ப்ரோமோக்களில் தெரியவந்தது.
ஆரியும் நிஷாவும்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கலங்கி வருகின்றனர். அதாவது இந்த ப்ரோமோவில் ஆரியும் நிஷாவும் கார்டனில் உள்ள லானில் அமர்ந்து பேசுகின்றனர்.
கண்கள் கலங்க..
அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் உட்பட அனைத்து ஹவுஸ்மேட்ஸும் கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது, இங்கே இருக்குற எல்லாரையுமே எனக்கு பிடிக்கும் என்று நிஷாவிடம் கூறும் ஆரி அடுத்த வார்த்தை பேச முடியாமல் கண்கள் கலங்க குரல் தழுதழுக்கிறார்.
உடைஞ்சு போயிடக் கூடாது
இதனை பார்த்த நிஷா, சகோதரா வேண்டாம் என்று அவரை ஆறுதல் படுத்துகிறார். மேலும் நான் உங்களுடன் உட்காந்து பேசுவதற்கான காரணமே நீங்கள் உடைஞ்சு போயிடக் கூடாது என்பதற்காகதான் என்கிறார்.
ரொம்ப கஷ்டமாயிடுச்சு
தொடர்ந்து பேசும் ஆரி, எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. என்கிட்ட ரெண்டு விஷயம் பார்த்தாங்க.. எல்லாரையும் நான் பாராட்டியிருக்கேன். எல்லா இடத்திலேயும் என்கரேஜ் பண்ணியிருக்கேன் என்று கண்ணீர் விட்டப்படியே கூறுகிறார்.
பொறாமையில செஞ்சேன்னு..
அதனைக் கேட்ட நிஷா, அதை நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான பண்ணீங்க என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, அது அவங்கள முழுசா போய் சேரலைங்கும் போது பொறாமையில செஞ்சேன் போட்டியில செஞ்சேன்னு சொல்றாங்க என்று கண்ணீர் வழிய பேசுகிறார்.
கலங்கியுள்ள ரசிகர்கள்..
இதனைக் கேட்ட நிஷா, உங்களுடன் 70 நாட்கள் ட்ராவல் பண்ணியிருக்கேன். நீங்க இங்க பொறாமைப்பட்டு பார்த்ததில்லை என்று கூறுகிறார். ஆரி கண்ணீர் விடும் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கலங்கியுள்ளனர்.