Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
படத்தை மெகா ஹிட்டாக்க ஆரி செய்த வேலை...டிரெண்டிங் ஆக்க தயாராகும் ரசிகர்கள்
சென்னை : ஷங்கர் தயாரிப்பில், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம் அறிமுகமானவர், ஆரி அர்ஜூனன். அவரது மூன்றாவது படமான நெடுஞ்சாலை படத்தில் ஆரியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
சமூக பணிகளால் பலரின் ஆதரவை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரியின் நேர்மையான நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று, பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் நடிப்பு வேலைகளை துவக்கி உள்ளார் ஆரி. சில படங்களில் தற்போது நடித்து வரும் ஆரி, தான் ஏற்கனவே நடித்துள்ள பகவான் படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பகவான் படம் திருவண்ணாமலை அருகில் உள்ள செஞ்சி கோட்டையில் படமாக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஆரியின் தோற்றம் பலரையும் கவர்ந்ததாக இருந்தது.
தற்போது இந்த படத்தில் தனது கேரக்டரின் பெயர் ஜோசப் விஜய் என்ற ரகசியத்தை ஆரி வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படம் விஜய் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கலிங்கன் எழுதி, இயக்கி உள்ளார்.