Don't Miss!
- News ரூ.150 கோடி மதிப்பு! 1200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு பேர் பங்கேற்றனர்.
ரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்!
முதல் வாரம் மட்டும் நாமினேஷன் இல்லாமல் சென்ற இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டனர்.
கேமரா கான்ஷியஸ்
ஒரே ஒரு வாரம் மட்டும் டபுள் எவிக்ஷன் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர், கேமரா கான்ஷியஸுடன் இருந்ததால் நடிக்கிறார்கள் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார்கள்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்
சண்டை சச்சரவுகள் சர்ச்சைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் இத்தனை நாட்களை கடந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தனித்துவமாக விளையாடிய சில போட்டியாளர்களும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் விஜய் டிவியையும் ரசிகர்கள் வறுத்தெடுத்து வந்தனர்.
கிராண்ட் ஃபினாலே..
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். நாளை வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.
பிரியாவிடை..
இதற்காக ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இதனால் ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியது பிக்பாஸ் வீடு. நேற்றைய எபிசோடில் உருக்கமாக பேசி மொத்த பேருக்கும் பிரியாவிடை கொடுத்தார் பிக்பாஸ்.
யாருக்கு அதிக ஓட்டு?
ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர் வெற்றி பெற வேண்டும் என வாக்குகளை அள்ளிக் கொட்டினர். நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் யார் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு வித்தியாசம்
அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட சுமார் 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிக முறை நாமினேஷன்
இதனை அடுத்து ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ்களில் கேப்டனாக இருந்த வாரங்களை காட்டிலும் அதிக முறை நாமினேஷனுக்கு வந்தவர் ஆரிதான்.
அதிக ரசிகர் பட்டாளம்
ஒவ்வொரு முறையும் அவர் நாமினேஷனுக்கு வரும் போதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ரசிகர்கள் முதல் நபராய் காப்பாற்றினர். பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களிலேயே ரொம்பவே கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரிதான். இதனாலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்ற அவர்தான் வின்னர் என்று கூறப்படுகிறது.
ரன்னர் அப் யார்?
அவருக்கு அடுத்தப்படியாக பாலாஜி ரன்னர் அப் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் ஒரு டிவிஸ்ட் அரங்கேறியுள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கையில் பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்து வந்த நிலையில் ரியோதான் ரன்னர் அப் என்றும் கூறப்படுகிறது.
ரியோவுக்கு தர திட்டம்?
விஜய் டிவி புராடெக்ட்டான ரியோவை பல எபிசோடுகளில் முன்னிலைப்படுத்தி வந்தனர். இதனால் ரியோவை வின்னர் ஆக்க விஜய் டிவி பிளான் பண்ணுவதாக நெட்டிசன்கள் விளாசி தள்ளினர். இந்நிலையில் அவரை குறைந்த பட்சம் ரன்னர் அப் ஆக்கலாம் என்று நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாஜிக்கு பேரிடி
ரியோ ரன்னர் அப் ஆகும் பட்சத்தில் பாலாஜிக்கு அது பேரிடியாக இருக்கும். ஆரியை டேமேஜ்ஜாக்கி தான் டைட்டில் வின்னர் ஆகலாம் என்று காத்திருந்தார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பழைய போட்டியாளர்களும் ஆரிக்கும் அவருக்குமே போட்டி இருப்பதாக கூறி வந்தனர்.
மண்ணை அள்ளி கொட்டி..
இதனால் வின்னர் ஆகாவிட்டாலும் ரன்னராகி விடுவோம் என்று நம்பியிருக்கிறார் பாலாஜி. ரியோவை ரன்னர் ஆக்கி அதிலும் லாரி லாரியாக மண்ணை அள்ளி கொட்டப் போகிறது விஜய் டிவி என்று தகவல் பரவி வருகிறது. என்ன நடக்கப் போகிறது என்பது நாளைய எபிசோடில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.