Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஆர்.கே. நகர் ரூ. 20க்கு ரூ.6,000 மேட்டரை மரண கலாய் கலாய்த்த நடிகர் ஆரி
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது 20 ரூபாய்க்கு ரூ. 6,000 என்று நடந்த பண வியாபாரம் குறித்து கலாய்த்துள்ளார் நடிகர் ஆரி.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.
தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அந்த 20 ரூபாயில் இருக்கும் சீரியல் எண்ணை சொன்னால் ரூ.6,000 அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.
வாக்குறுதி
தேர்தலில் அவர் வெற்றி பெற்றும் இன்னும் சொன்னபடி ரூ. 6 ஆயிரம் கிடைக்காமல் வாக்காளர்கள் கடுப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கலாய்
ஆறாம் திணை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆரி ஆர்.கே. நகர் மேட்டரை கலாய்த்து பேசினார். ஆறாம் திணை நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும். ஆனால் ஆர்.கே. நகர் அளவுக்கு பெறுமா என்று கேட்காதீர்கள் என்றார்.
கடைகள்
ஆர்.கே. நகரில் உள்ள கடைகளில் போய் 20 ரூபாய் நோட்டை கொடுத்தால் மிரள்கிறார்கள். ஆர்.கே. நகரில் ஓட்டு போடும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றார் ஆரி.
தொழில்நுட்பம்
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு சென்றேன். பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அத்தியாசிய தேவையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ளேன். இப்படி ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும். கடலுக்கு செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடிக் கண்டுபிடிக்க வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கேயும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆரி கூறினார்.