வீடு திரும்பினார் ஆர்த்தி! சென்னை: மாடிப்படியில் இருந்து தவறியோ, தள்ளிவிடப்பட்டோ விழுந்து தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நடிகை ஆர்த்தி அகர்வால், வீடு திரும்பினார். பிப்ரவரி 3 மாதம் 16ம் தேதி தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்தார் ஆர்த்தி அகர்வால். குடும்பத்தில் நடந்த சண்டையின்போது ஆர்த்தி அகர்வாலின் தந்தையே அவரை கீழே தள்ளி விட்டதாக பரபரப்பு தகவல்கள வெளியாகின. மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்த்தி அகர்வால். அங்கு அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து ஆர்த்தி அகர்வால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் மருத்துவமனையை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் டிவி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் குழுமியிருந்தனர். இதனால் நெடுநேரம் மருத்துவமனைக்குள்ளேயே ஆர்த்தி அகர்வால் இருந்தார். பின்னர் டாக்டர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்த்தியின் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தமோ, பதட்டமோ ஏற்படக் கூடாது, அதிகம் பேசவும் கூடாது. எனவே இப்போதைக்கு அவரை வீடு திரும்ப உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தொந்தரவு செய்யாமல் வழி விட்டனர். இதன் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆர்த்தி அகர்வால் வெளியே வந்தார். தயாராக இருந்த காரில் ஏறி தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.

By Staff

சென்னை:


மாடிப்படியில் இருந்து தவறியோ, தள்ளிவிடப்பட்டோ விழுந்து தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நடிகை ஆர்த்தி அகர்வால், வீடு திரும்பினார்.

பிப்ரவரி 3 மாதம் 16ம் தேதி தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்தார் ஆர்த்தி அகர்வால். குடும்பத்தில் நடந்த சண்டையின்போது ஆர்த்தி அகர்வாலின் தந்தையே அவரை கீழே தள்ளி விட்டதாக பரபரப்பு தகவல்கள வெளியாகின.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்த்தி அகர்வால். அங்கு அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை முடிந்து ஆர்த்தி அகர்வால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் மருத்துவமனையை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் டிவி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் குழுமியிருந்தனர்.


இதனால் நெடுநேரம் மருத்துவமனைக்குள்ளேயே ஆர்த்தி அகர்வால் இருந்தார்.

பின்னர் டாக்டர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்த்தியின் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தமோ, பதட்டமோ ஏற்படக் கூடாது, அதிகம் பேசவும் கூடாது.

எனவே இப்போதைக்கு அவரை வீடு திரும்ப உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தொந்தரவு செய்யாமல் வழி விட்டனர்.

இதன் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆர்த்தி அகர்வால் வெளியே வந்தார். தயாராக இருந்த காரில் ஏறி தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.

Read more about: actress aarthi returns home
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X