Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீடு திரும்பினார் ஆர்த்தி! சென்னை: மாடிப்படியில் இருந்து தவறியோ, தள்ளிவிடப்பட்டோ விழுந்து தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நடிகை ஆர்த்தி அகர்வால், வீடு திரும்பினார். பிப்ரவரி 3 மாதம் 16ம் தேதி தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்தார் ஆர்த்தி அகர்வால். குடும்பத்தில் நடந்த சண்டையின்போது ஆர்த்தி அகர்வாலின் தந்தையே அவரை கீழே தள்ளி விட்டதாக பரபரப்பு தகவல்கள வெளியாகின. மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்த்தி அகர்வால். அங்கு அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து ஆர்த்தி அகர்வால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் மருத்துவமனையை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் டிவி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் குழுமியிருந்தனர். இதனால் நெடுநேரம் மருத்துவமனைக்குள்ளேயே ஆர்த்தி அகர்வால் இருந்தார். பின்னர் டாக்டர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்த்தியின் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தமோ, பதட்டமோ ஏற்படக் கூடாது, அதிகம் பேசவும் கூடாது. எனவே இப்போதைக்கு அவரை வீடு திரும்ப உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தொந்தரவு செய்யாமல் வழி விட்டனர். இதன் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆர்த்தி அகர்வால் வெளியே வந்தார். தயாராக இருந்த காரில் ஏறி தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.
சென்னை:
மாடிப்படியில் இருந்து தவறியோ, தள்ளிவிடப்பட்டோ விழுந்து தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நடிகை ஆர்த்தி அகர்வால், வீடு திரும்பினார்.
பிப்ரவரி 3 மாதம் 16ம் தேதி தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்தார் ஆர்த்தி அகர்வால். குடும்பத்தில் நடந்த சண்டையின்போது ஆர்த்தி அகர்வாலின் தந்தையே அவரை கீழே தள்ளி விட்டதாக பரபரப்பு தகவல்கள வெளியாகின.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்த்தி அகர்வால். அங்கு அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை முடிந்து ஆர்த்தி அகர்வால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரால் மருத்துவமனையை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் டிவி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் குழுமியிருந்தனர்.
இதனால் நெடுநேரம் மருத்துவமனைக்குள்ளேயே ஆர்த்தி அகர்வால் இருந்தார்.
பின்னர் டாக்டர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்த்தியின் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தமோ, பதட்டமோ ஏற்படக் கூடாது, அதிகம் பேசவும் கூடாது.
எனவே இப்போதைக்கு அவரை வீடு திரும்ப உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் தொந்தரவு செய்யாமல் வழி விட்டனர்.
இதன் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆர்த்தி அகர்வால் வெளியே வந்தார். தயாராக இருந்த காரில் ஏறி தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.