தொடையழகு காற்றில் பறக்க மீசைய முறுக்கு வெளியிட்ட குளுகுளு போட்டோ!
சென்னை : ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
தற்பொழுது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நாயகியாக மாறி வரும் இவர் இப்பொழுது மொட்டை மாடியில் தொடை அழகு காற்றில் பறக்க குளு குளு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

முதல் முறையாக ஹீரோவாக
முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி ஆனால் அடுத்தடுத்து நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத சோகத்தில் இருக்கிறார் நடிகை ஆத்மிகா. இசை அமைப்பாளராக இருந்து இப்போது கதாநாயகனாக மாறியிருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆத்மிகா.
Recommended Video

கிடப்பில் போடப்பட்டுள்ளது
இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா ஆகியோருடன் இணைந்து நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்க பணப் பிரச்சனை காரணமாக இன்றுவரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நம்பிக்கையாக உள்ளது
இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டராக நடிக்க அவருடன் இணைந்து ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருக்கும் ஆத்மிகா வுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது.

ரசிகர்களை குஷிப்படுத்தும்
மேலும் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் காட்டேரி மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்துள்ள ஆத்மிகா சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஃபேன் ஃபாலோங்சை கொண்டுள்ளார். தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பல்வேறு கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்பொழுது மொட்டைமாடியில் குட்டி கவுனை அணிந்து கொண்டு காற்றில் பளபளப்பான தொடையழகு பக்காவாக தெரிய வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications