நடிகர்கள் சூர்யா, கார்த்தியை தொடர்ந்து.. EIA குறித்து போல்டா பேசிய பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகர்கள் சூர்யா, கார்த்தியை தொடர்ந்து EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு சட்டம் தொடர்பாக பிரபல நடிகை கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
மீசையை முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா, அவர் தான் தற்போது, EIAவிற்கு எதிரான தனது கருத்தை வீடியோ மூலம் வெளியிட்டு இருக்கிறார்.
மெளனம் காக்க கூடாது என நடிகர் சூர்யா ட்வீட் போட்டிருந்த நிலையில், போல்டாக தனது கருத்தை ஆத்மிகா எடுத்துரைத்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த இஐஏ பிரச்சனை
இயற்கை வளங்களை வளர்ச்சி திட்டங்களுக்காக அழிக்க நேரிட்டால், மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள EIA 2020க்கு எதிராக சினிமா பிரபலங்களான நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஆத்மிகா உள்ளிட்டோர் தங்களின் குரலை வெளிப்படுத்தி உள்ளனர்.

சந்ததியினரை பாதிக்கும்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இயற்கை வளங்களை மக்களின் கருத்துக் கேட்காமலே சாலை அமைக்கவும், பாலங்கள் அமைக்கவும், அரசு அழிக்கலாம் என்கிற ரீதியில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். மேலும், இதனால் வரும் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றுள்ளனர்.

விஸ்வரூபம் எடுத்த இஐஏ பிரச்சனை
இயற்கை வளங்களை வளர்ச்சி திட்டங்களுக்காக அழிக்க நேரிட்டால், மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள EIA 2020க்கு எதிராக சினிமா பிரபலங்களான நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஆத்மிகா உள்ளிட்டோர் தங்களின் குரலை வெளிப்படுத்தி உள்ளனர்.

வேண்டுகோள்
மேலும், வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அந்த டிராப்டை மக்கள் அனைவரும் படித்துப் பார்த்து, அதில் உள்ள சாதக பாதகங்களை அறிந்து கொண்டு, தங்களின் கருத்தை இ-மெயில் பண்ண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆத்மிகா.


Click it and Unblock the Notifications











